திண்டுக்கல், டிச. 4: திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி புனித நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜா தலைமை வகிக்க, திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஊராட்சி தலைவர் மாதவி காமராஜ் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண்புரை, எலும்பு மூட்டு சிகிச்சைகள் மற்றும் குழந்தைகள்- மகளிர் சிறப்பு பரிசோதனைகள் நடத்தினர்.
இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கமாலுதீன், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் அசோக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.