×

திருவையாறில் வரும் 11ம் தேதி நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்

திருவையாறு.டிச.4: திருவையாறில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நீதிபதிகள் பங்கேற்றனர். திருவையாறு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான தனசேகரன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வரும் 11ம் தேதி நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக திருவையாறு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி தனசேகரன், நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கி பேசும்போது, வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு முடிக்க ஆகும் காலத்தைவிட குறைவான காலத்தில் சுமுகமான முறையில் வழக்குகளை முடிக்க வேண்டும். இரு தரப்பும் பாதிப்பு அடையாத வண்ணம் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அசல் வழக்குகள், காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப வண்முறை சம்மந்தப்பட்ட வழக்குகள், சமாதானமாக போகக்கூடிய குற்ற வழக்குகள், ஆகியவற்றை முடித்து கொள்வதுப்பற்றி வழக்கறிஞர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், வழக்கறிஞர்கள், வழக்காடிகள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப்பணி தன்னார்வலர் எழிலரசன் செய்திருந்தார்.

Tags : People's Court ,Thiruvaiyar ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...