×

செய்யாறு அருகே சாரண மாணவர்களுக்கான ராஜ்ய புரஸ்கார் தேர்வு

செய்யாறு, டிச.3:  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டம் பாரத சாரண- சாரணியர் சார்பில் சாரணர் மாணவர்களுக்கான ராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் தேத்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த முகாமினை மாவட்ட ஆணையர் எம்.சங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கே.ஜெய்சங்கர் வரவேற்றார். மாநில பயிற்சியாளர்கள் பி.சக்கரவர்த்தி, ஏ.மதுபாலா, உதவி பயிற்சியாளர்கள் கே.செல்வகுமார், பி.செல்வராஜ், ஜே.பாபு, பி.அனுராதா, எ.காந்திமதி உள்ளிட்ட குழுவினர் பல்வேறு தலைப்புகளின்கீழ் தேர்வுகள் நடத்தினர்.  செய்யாறு கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றிலிருந்து 99 சாரண மாணவர்களும், 82 சாரணிய மாணவிகளும் என 181 பேர் ராஜஸ்கார் தேர்வில் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு ஆணையர் கை.செல்வகுமார் நன்றி கூறினார்.

Tags : Seiyaru ,
× RELATED செய்யாறு அருகே அரசு...