×

சமூக நல்லிணக்க ’கபீர் புரஸ்கார்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, டிச. 3:தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்காக வழங்கப்படும், ’கபீர் புரஸ்கார்’ விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆண்டு தோறும் முதல்வரால் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விருதுக்காக தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்ப படிவங்களை அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை 08.12.2021க்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு, மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி-628001 என்ற முகவரியில் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 0461 2321149 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED (வேலூர்) 9ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பலி வேலூர் அருகே சோகம்