×

நல்லூர் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

ஆலங்குளம், டிச. 3: நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் ஜேசு ஜெகன் தலைமை வகித்தார். நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சோன், துணை முதல்வர் சுரேஷ் சாலமோன், பேராசிரியர்கள் ஆபிரகாம் டேனியல்ராஜ், சாமுவேல் செல்வின் துரை, உடற்கல்வி இயக்குநர் ஜூலியன்ஸ் ராஜாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வில்சன் வரவேற்றார். பேராசிரியர்கள் அனிதா சுவிட்லின், பெசிலியா கேத்தரின் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கல்லூரி பருவத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெற்றோர் பெருமிதம் கொள்ளும் வகையில் சாதனையாளராக மாற இந்த பருவமே சரியான தருணம், என்றார். முன்னதாக பேராசிரியை ஞானவிஜி வேதபாடம் வாசித்தார். துறை தலைவர்கள் சாந்தி, மகாராணி எலிசபெத், கிறிஸ்டி ரோஸ்லின் கனி, பிரேம் ரோஸ் தாயம்மாள், கவிதா, சிந்தா மதார், ஜெசிக்காள், நித்யகல்யாணி மற்றும் ஜோகன்னா, மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சொர்ண ஜெயா நிறைவு ஜெபம் செய்தார். பேராசிரியர் எபனேசர் பொன்செல்வி நன்றி கூறினார்.

Tags : Nallur College ,
× RELATED நல்லூர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா