×

மானூரில் பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

மானூர், டிச. 3: மானூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி தலைவர் பராசக்திசெல்வேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து   பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ்  23 பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார்.  ஊராட்சி பகுதியிலுள்ள தெரு விளக்குகள், பழுதடைந்த குடிநீர் குழாய்கள்களை பார்வையிட்டு சீரமைக்க உத்தரவிட்டார். மானூர் பஜார் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்து மருந்து தெளித்து தொடர்ந்து சுத்தமாக வைத்திட  குடியிருப்பு வாசிகளை அறிவுறுத்தினார். மழை காலங்களில் தொற்றுநோய்  ஏற்படாத வகையில் குடிநீரை கொதிக்க   வைத்து  பயன்படுத்த வேண்டும்.  பஜார் கடைகளில் தின்பண்டங்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தினார். ஆய்வின்போது துணை தலைவர் கனகம்மாள், வார்டு உறுப்பினர்கள் சாந்தி, ஜெயலட்சுமி, மைக்கேல், ஜேக்கப்செல்லையா, ஞானசெல்வி, பார்வதி, வள்ளியம்மாள், மாடசாமி, மற்றும் ஊராட்சி செயலர் முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Manor ,
× RELATED திருநெல்வேலி மானூர் ஊராட்சி ஒன்றிய...