×

கிருஷ்ணகிரி அருகே பென்னாகரம் மாணவி கடத்தல்

கிருஷ்ணகிரி, டிச.3: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மூலப்பெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, ஏரியூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த சில நாட்களாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பனகமுட்லுவில் உள்ள பாட்டி வீட்டில், சிறுமி தங்கியிருந்தாள். இந்நிலையில், கடந்த 29ம் தேதி சிறுமி திடீரென மாயமானாள். பல்வேறு இடங்களில் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு முதுகுறி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்(19) என்பவர், பனகமுட்லுவில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு வந்து சென்றபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ் சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Pennagaram ,Krishnagiri ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்