×

செந்துறை பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த சாலை சீரமைப்பு

செந்துறை,டிச.3: செந்துறை பகுதியில் மழையால் சேதமடைந்த தார் சாலையினை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தொடர்ந்து பெய்துவந்த மழையால் தார் சாலைகளில் தேங்கி நின்றதால் சாலைகள் பலவீனமடைந்து. சிறுசிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை சீரமைக்க உத்தரவிட்டதன்படி செந்துறை நெடுஞ்சாலைத்துறையினர் பேருந்து நிலையம் அருகே அரியலூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த மூன்று பள்ளங்களை தார் ஊற்றி சீரமைத்தனர். மேலும் மற்ற இடங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க துரிதமாக செயல்பட்டு வருகின்றனர், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றியினையும், பாரட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags : Sendurai ,
× RELATED செந்துறையில் டீக்கடையில் காஸ் கசிவு