×

செம்பனார்கோயில் அருகே தொழிலாளிக்கு டெங்கு காய்ச்சல்

செம்பனார்கோயில், டிச.3: செம்பனார்கோயில் அருகே பரசலூர் ஊராட்சி நக்கீரர் தெருவை சேர்ந்த ஒருவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து சொந்த ஊருக்கு வந்த பின்னரும் காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அந்த தெருவில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் முன்னிலையில் சுகாதார பணிகளை தீவிரமாக நடைபெற்றது. அப்போது சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து தெளித்தனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டன. பின்னர் அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குளோரின் பவுடரும், அந்த தெருவில் பிளிச்சிங் பவுடரும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்த பணியின் போது ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா நாராயணன், ஊராட்சி செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : Sembanarkoil ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை