×

திருவையாறு வேளாண்மை வட்டாரத்தில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

திருவையாறு, டிச.2: திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தி கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடியினை ஊக்குவிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் குமரன் முகாமில் கலந்துகொண்டு உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் பற்றியும், கோடை உளுந்து சாகுபடிக்கு தேவையான உளுந்து விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் அரசு மானியத்தில் வழங்கப்பட உள்ளது என விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். இப்பயிற்சி முகாமில், வேளாண்மை அலுவலர் புனிதா, உதவி வேளாண்மை அலுவலர் அகிலா, அட்மா தொழில்நுட்ப மேலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா