×

விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

விராலிமலை, டிச.2: விராலிமலை அருகே உள்ள விராலூரைச் சேர்ந்தவர் அழகர்(31). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிகளுக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றவர், மீண்டும் வீடு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை சவரன் தங்க நகை மற்றும் ரூ.3000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து விராலிமலை போலீசில் அழகர் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், ரொக்கத்தை திருடிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : Viralimalai ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா