×

அரியலூரில் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர்,டிச.2: திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிக்கு வருகிற 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே விண்ணப்பிக்க கலெக்டர் ரமண சரஸ்வதி அழைப்பு விடுத்துள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவ, மாணவியர்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

2021-22ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண், போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப்பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். அரியலூர் மாவட்டத்தில் 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியர் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது.

போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இன்று (1ம் தேதி) முதல் 15ம் தேதி முதல் 15ம் தேதி மாலைக்குள் அரியலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்திலோ www.tamilvalarchithurai.com இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04329-228188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags : Tirukukkal ,Arialur ,
× RELATED அரியலூரில் தனியார் பட்டாசு ஆலையில்...