×

பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 12 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்

ஜெயங்கொண்டம், டிச.2: அரியலூர் மாவட்டம் காரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டியை கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்ட போது காவல்துறையினருடன் இணைந்து மூதாட்டியை காப்பாற்ற உதவிய தன்னார்வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, தீபன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா பேரிடரால் பாதிப்படைந்த தா.பழூர் அனைகுடம் கிராமத்தைச் சேர்ந்த குஞ்சிதபாதம் விசிறி தாத்தா (80) என்பவருக்கு உதவி புரிந்த அன்னை தெரசா கல்வி குழுமம் தாளாளர் முத்துக்குமரன் ,கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்று திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 56 பசுமாடுகளை தீயணைப்புத் துறையுடன் இணைந்து காப்பாற்ற உதவிய பாஸ்கர் (52), பரமசிவம் (46), சரவணன் (35), அருண் (25), பிரவீன் (22),

சாத்தம்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் திட்டில் வெள்ளத்தால் சிக்கிய 60க்கும் மேற்பட்ட பசுமாடுகளைதனிஒருநபராக காப்பாற்றி கரை சேர்த்த முருகன் (30)ன்மெச்சத் தகுந்த செயலை பாராட்டும் விதமாக மேற்குறிப்பிட்ட அனைவருக்கும் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் நேரில் பாராட்டுக்களை தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் அரியலூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் ஏடிஎஸ்பி திருமேனி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...