×

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

நெல்லை, டிச. 2: தேவர்குளம் பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (37). இதே பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (32) மற்றும் விக்னேஷ்(25) ஆகியோருக்கு இடையே கழிவுநீர் கால்வாய் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 28ம் தேதி சுகுமார் வீட்டில் இருந்த போது அங்குவந்த மனோகர், விக்னேஷ் ஆகியோர் அவரிடம் தகராறு செய்து கம்பியால் தாக்கினர். இதில் சுகுமார் காயமடைந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொ) ராமர் விசாரணை நடத்தி மனோகரன், விக்னேசை கைது
செய்தார்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு