×

விபத்தில் வாலிபர் பலி

தேவகோட்டை, டிச.2: தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி செல்லும் சாலையில் பொதுப்பணித் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. குணகரை பஸ் நிறுத்தம் அருகில் ஜல்லிக்கற்களை கொட்டி வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா குமுலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமுத்து மகன்கள் சுரேஷ்(33), ரமேஷ்(26) இருவரும் தேவகோட்டையில் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு டூவீலரில் திரும்பினர். குணகரை அருகே வந்தபோது ஜல்லிக்கற்கள் மீது ஏறியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷ் சிறு காயங்களுடன் தப்பினார். சிறிது நேரத்தில் அதே வழியாக சாத்தனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு(35) டூவீலரும் ஜல்லிக்கற்கள் மீது ஏறியதில் அவர், படுகாயமடைந்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Walibar ,
× RELATED ஒரத்தநாடு அருகே மாயமான வாலிபர் ஆற்றில் சடலமாக மீட்பு