×

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.23.62 லட்சம் நலத்திட்ட உதவி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

விருதுநகர், டிச .2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது கலெக்டர் மேகநாதரெட்டி, எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்பி மனோகர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 985 பேருக்கு ரூ.16.99 லட்சம் கல்வி உதவித்தொகை, 338 பேருக்கு ரூ.3.38 லட்சம் ஓய்வூதியம், 13 பேருக்கு ரூ.3.25 லட்சம் இயற்கை மரண உதவித்தொகை என 1,336 பேருக்கு ரூ.23.62 லட்சத்திற்கான உதவித்தொகைகளை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர், ராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த சிவகாசி துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அசோக்குமார் மனைவி ரூபாவதிக்கு விஏஓ பணி நியமன ஆணையை வழங்கினார். இதில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Sathur Ramachandran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...