×

கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அருப்புக்கோட்டை, டிச. 2:  தமிழக ஆசிரியர் கூட்டணி அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட செயலாளரும்,  விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அழகராஜ் தமிழக முதல்வருக்கு  கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில், ‘கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு நவம்பர் முதல் தேதியில் இருந்து தான் தொடக்க,  நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த ஆண்டு ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மற்றும் சுகாதார குறைவான தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வேண்டி விண்ணப்பம் நவ.18ம் தேதிக்குள் வழங்குமாறு விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு வரை மாணவர்களின் பெற்றோர் வங்கி கணக்கில்தான் உதவித்தொகை செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு முதல் மாணவர்களின் பெயரில் தான் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆதார் மற்றும் இருப்பிட முகவரி மாறுதல், பெற்றோர் வேறு ஊரில் வேலை செய்தல் போன்ற காரணங்களினால் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் மாணவர் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்க காலதாமதம் ஏற்படுகிறது.  இந்த ஆண்டு மட்டும் வங்கிக்கணக்கு தொடங்க இயலாத மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கவும், மேலும் விண்ணப்பிக்க மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

Tags : Teachers' Coalition ,
× RELATED அரியலூர், திருமானூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்