×

சிவகாசியில் மழையால் சேதமான 32 வீடுகளுக்கு ரூ.1.36 லட்சம் நிவாரண தொகை

சிவகாசி, டிச. 2: சிவகாசியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் சிவகாசி தாலுகாவில் சுக்கிரவார்பட்டி, வடபட்டி புதுார், நிறைமதி, அனுப்பன்குளம், தாயில்பட்டி, வெள்ளையாபுரம், ராமச்சந்திராபுரம், மங்கலம், நடுவபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 36 வீடுகள் சேதம் அடைந்தது. இதில் பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.4 ஆயிரத்து 100ம் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரண தொகை என மொத்தம் 32 வீடுகளுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 200 நிவாரண தொகை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை தாசில்தார் ராஜ்குமார் வழஙகினார்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து