×

2 கோயில்களில் நகை திருட்டு

கோவை, டிச. 2: கோவை நெகமம் அடுத்த கன்னியாளம்பாளையம் பகுதியில் அகோர வீரபத்திர காளியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே மாரியம்மன் கோயிலும் உள்ளது. 2 கோயில்களுக்கும் நடராஜ் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று நடராஜ் கோயிலில் பூஜைகள் முடித்து விட்டு இரவு கோயில்களை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.காலை நடராஜ் வழக்கம் போல அகோர வீரபத்திர காளியம்மன் கோயிலை திறக்க வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உள்ளே சென்று பார்த்தபோது சாமியின் கழுத்தில் இருந்த 1 கிராம் தங்க தாலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. நடராஜ் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கும் சென்றார்.  அங்கும்  கதவின் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் இருந்த 1 கிராம்  தங்க தாலி திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் உடனே நெகமம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த  கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி