×

கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருப்பரங்குன்றம், டிச. 1: திருப்பரங்குன்றம் அருகில் 742 ஏக்கரில் நிலையூர் பெரிய கண்மாய் உள்ளது. இதன் மூலம் 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் நிலையூர் கால்வாய் வழியாக வருகின்றது. இந்நிலையில், தற்போது தொடர் மழையால் கண்மாய் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இந்நிலையில், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இப்பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்ப்பட்டோர் பெங்களூரு-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ஏர், கலப்பையுடன் நேற்று காலை  சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மேலும், இந்த கண்மாய்க்கு நிலையூர் கால்வாயில் தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Kanmai ,
× RELATED கொட்டாம்பட்டி அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா