×

சாணார்பட்டி, கன்னிவாடியில் முதியவர் உள்பட 2 பேர் கொலை

கோபால்பட்டி, டிச. 1: கன்னிவாடி அருகே வீரபுடையான்பட்டியை சேர்ந்தவர் சின்னகாளை என்ற விஜயகுமார் (47). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவருக்கும், இவரது உறவினருமான சந்தோஷ் மணிவேல் இடையே செல்போன் வாங்கியதிலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை சின்னகாளை அவரது வீட்டிற்கு எதிரேயுள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த கன்னிவாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக கன்னிவாடி போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். *சாணார்பட்டி அருகே கணவாய்பட்டி ஊராட்சி மேட்டுப்பட்டியை சேர்ந்தவவர் பெரியதம்பி (70). ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர். இவரது 3 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர்.
நல்லதம்பி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். நேற்று காலை வீட்டில் இவர் ஆட்டுக்கல்லை போட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.  தகவலறிந்து வந்த சாணார்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது கொடுக்கல், வாங்கல் பிரச்னையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sanarpatti, Kanniwadi ,
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...