திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் நாகல்நகர் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ விழா நடைபெற்றது. திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பிரம்மோற்சவ விழா நடந்தது. இதையடுத்து தேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.