×

இலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்

சேந்தமங்கலம், ஏப்.23: புதுச்சத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், இலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நடவு நேர்த்தி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் பேபி கலா தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் தரண்யா முன்னிலை வகித்தார் இதில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கலந்துகொண்டு வெள்ளரி விதை நடவு செய்வது, பராமரிப்பது, உற்பத்தி செய்த வெள்ளரியை லாபம் தரும் வகையில் விற்பனை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags : Literary Bar ,
× RELATED இலக்கியம்பட்டி ஏரியில் பரிசல் சவாரிக்கு நடவடிக்கை