×

நரிக்குறவர் சமூகத்தினர் எதிர்பார்ப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை அமோகம்

புத்துக்கோட்டை, ஏப்.20: புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளில் பனைநுங்குகளை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். மிகக்கடுமையான வறட்சியைத் தாங்குவதற்கும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் விரும்புகிற பொதுமக்கள் ஐஸ்கிரீம், குளிர் பானங்களோடு, இளநீர்,வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நொங்கு, மோர் ஆகியவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பார்கள்.
இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் விரும்பக்கூடிய ரசாயனக் கலப்படமற்ற இயற்கையான உணவுப் பொருட்களுக்குதான் மவுசு கூடிவருகிறது.
இதில் சீசன் ஏதுமின்றி ஆண்டுதோறும் பரவலாக இளநீர் விற்கப்படும் நிலையில், சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்பனைக்குவந்து குவிக்கப்பட்டுவிட்டது. இளநீருக்கு இணையான நொங்கு மட்டும் ஏகோபித்த மக்களின் எதிர்பார்ப்பாகவே இருந்து வந்தது.

தற்போது நொங்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக விற்பனைக்காக களமிறக்கப்பட்டுள்ளன. தாகத்தை தணிக்கவும், சூட்டை தணிக்கவும் நொங்கு பயன்பட்டாலும், வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு போன்ற உடல் பாதிப்புகளுக்கு உடலில் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனைமரங்கள் பராமரிப்பின்றி குறைந்து விட்டபோதும், அன்னவாசல், ஆலங்குடி, கிள்ளுக்கோட்டை, நார்த்தாமலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்சயமம் நுங்க வெட்டப்படுகிறது. நுங்கிற்குமுழுமையான சீசன், முன்கூட்டியே தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நுங்கு சுளை ஒன்று ரூ.10 என கிராமங்களிலும் சாலையோர கடைகளிலும் விற்கப்படுகிறது. அதனை ஆவலுடன் பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விராலிமலை செல்லும் சாலையில் கட்டியாவயல், மதுரை சாலை, அறந்தாங்கி சாலை, ஆலங்குடி சாலை, தஞ்சாவூர் சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு இளாநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கூல், நொங்கு, போன்றவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வெயிலை சமாளிக்க இது போன்ற கடைகளில் வாகனங்களை நிறுத்தி வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். இதில் அதிகமாக நுங்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Narikkuvar ,Pudukottai district ,
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை