வேடசந்தூர், ஏப். 20: வேடசந்தூர் பகுதியில் உள்ள வாடகை கார், லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் சண்முகா ஆனந்து நேரில் சென்று, தற்போது கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதனால் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து செலலும் போது முகக்கவசம் அணிந்து கைகளை முறையாக சுத்தம் செய்து பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல வேண்டும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லு கூடாது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுரை வழங்கினார்.