×

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆலங்குளம், சங்கரன்கோவில் தொகுதி கேமரா காட்சி மிஸ்சிங்கால் பரபரப்பு


நெல்லை, ஏப்.20: தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் போலீசாருடன் அரசியல் கட்சி முகவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே இருமுறை கேமராவில் பழுது ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய நிலையில் நேற்று அதிகாலை ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான கேமராவில் சுமார் 4 நிமிடங்கள் வரை பதிவான காட்சிகள் டிவி திரையில் தெரியவில்லையாம். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளின் முகவர்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் மின்வயரில் ஏற்பட்ட தொய்வால் டிவி திரையில் காட்சிகள் தெரியவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags : Tenkasi ,Alangulam ,Sankarankoil ,
× RELATED தென்காசி சங்கரன்கோவிலில் ஓட்டுநர்...