×

மர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்

மேட்டூர், ஏப்.19: கொளத்தூர் அடுத்த மூலகாட்டை சேர்ந்த சீனிவாசன் மனைவி லட்சுமி(47). கண்ணாமூச்சி கிராமத்தை சேர்ந்த ராமசாமி மனைவி கோவிந்தம்மாள்(48). நேற்று இருவரும் வீட்டில் தனியாக இருந்த  போது, அடையாளம் தெரியாத 4நபர்கள் வீட்டிற்குள் புகுந்து இரும்பு கம்பியால், அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும், மேட்டூர் அரசு மருத்துவமனையில் ்சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது