×

திருக்காட்டுப்பள்ளி அருகே பாம்பு கடித்து பெண் தொழிலாளி பலி

திருக்காட்டுப்பள்ளி, ஏப் 18: திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் குடியானத்தெரு ரவி மனைவி சரஸ்வதி (38). இவரது கணவர் ரவி இறந்து விட்டார். இருமகன்கள் உள்ளனர். சரஸ்வதி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் (16ம் தேதி) அதே ஊரை சேர்ந்த சரோஜா என்பவரது வீட்டில் வேலை பார்த்தபோது வீட்டின் பின்புறம் இருந்த செங்கல்களை எடுத்துள்ளார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சரஸ்வதி இறந்த போனது தெரிந்தது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Thirukattupalli ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி பூதமணியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை