×

குடும்ப தகராறு காரணமாக ெசல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் டிரைவரால் காரியாபட்டியில் பரபரப்பு

காரியாபட்டி, ஏப். 18: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(40). தனியார் பஸ் டிரைவராக உள்ளார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதால் ஆறுமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது மனைவி திரும்பி வராத காரணத்தால் ஆத்தரமடைந்த ஆறுமுகம் நேற்று மல்லாங்கிணறு பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆறுமுகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். அத்துடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kariyapatti ,
× RELATED நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி