×

திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பை நேரில் ஆய்வு



விருதுநகர், ஏப்.18: விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வித்யா பொறியியல் மற்றும் கலைக்கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. 109 துணை ராணுவத்தினர், 123 தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினர், 383 ஆயுதப்படை போலீசார் மற்றும் லோக்கல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு இயந்திர வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் சுற்றுச்சுவர் இல்லாததால் 350 சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழி தொகுதி வேட்பாளர் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் தொகுதி வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சாத்தூர் தொகுதி வேட்பாளர் ரகுராமன், ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கபாண்டியன் ஆகியோர் வித்யா பொறியியல் கல்லூரியில் மின்னணு வாக்கு இயந்திர பாதுகாப்பை கண்காணிப்பு அறையில் இருந்து பார்வையிட்டு, இயந்திர பாதுகாப்பை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

Tags : DMK ,
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்