சின்னமனூர், ஏப். 18: சின்னமனூர் பகுதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. சின்னமனூர் காளியம்மன் கோயில் திருவிழாவில், பூசாரி கோயில் பெட்டியை தலையில் தூக்கிக் கொண்டு, மார்க்கையன் கோட்டை முல்லைப் பெரியாற்றுப் படித்துறையில் கரகம் எடுத்து, பூஜை செய்து ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.