×

வீடு புகுந்து சாட்சிகளை மிரட்டிய ரவுடி கைது

புதுச்சேரி, ஏப். 17:  வீடு புகுந்து சாட்சிகளை மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முத்தியால்பேட்டை, குட்டி கிராமணி வீதியை சேர்ந்தவர் வீரமலை (40). இவரது மனைவி மகேஸ்வரி (38). ஒரு வருடத்துக்கு முன் இவரது மகன் சச்சினை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சச்சின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் தற்போது நடந்து வருகிறது. இவ்வழக்கில் சச்சினும், அவரது உறவினரும் விரைவில் சாட்சி சொல்ல உள்ளனர். ந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி அவரது வீட்டிற்கு வந்த முத்தியால்பேட்டையை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரவுடியான பிரவீன் என்ற ஷாஜகான், அகமது உசேன் ஆகியோர் தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது என சச்சின் உள்ளிட்ட சாட்சிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து மகேஸ்வரி, முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், 4 பிரிவுகளின்கீழ் 2 பேர் மீதும் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரவுடி ஷாஜகானை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கோவிட் பரிசோதனைக்குபின் அவரை மாஜிஸ்திரேட் முன் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஷாஜகான் மீது கோட்டக்குப்பத்தில் கொலை மற்றும் முத்தியால்பேட்டையில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Rowdy ,
× RELATED கட்சியில் ரவுடியை சேர்க்கவே ஐபிஎஸ்...