×

சாத்தூர் அருகே மாணவி மாயம்

சாத்தூர், ஏப். 17: சாத்தூர் அருகே காளபெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதங்கம்(46). மனைவி அப்பம்மாள் (43). கூலி தொழிலாளியான இவர்களுக்கு 17 வயதில் பிளஸ் 2 படித்து வரும் பெண் குழந்தையும், 15 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற பெண் குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், தாய் அப்பம்மாள் அப்பையநாயக்கன்பட்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags : Sattur ,
× RELATED தொழில் போட்டியில் தொழிலாளியை வெட்டி கொன்றவருக்கு ஆயுள் சிறை