×

கூடலூரில் கனமழை சுரங்கனாறு நீர்வரத்து பாலத்தில் மண் அடைப்பு

கூடலூர், ஏப். 17: கூடலூர் பகுதியில் பெய்த கனமழையால் சுரங்கனாறு நீர்வரத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள மண்அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கூடலூர் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பாதையில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. மேலும் வழியில் 18ம் கால்வாய் பாலத்தின் அருகே தெற்கு பகுதியில் சுரங்கனாறு நீர்வரத்து பாலம் கட்டப்பட்டள்ளது. மலைப்பகுதியில் பெய்யும் மழை வெள்ளம் இந்த பாலம் வழியாகத்தான் கூடலூர் ஒட்டான்குளத்திற்கு வருகிறது. இப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து கொண்டு வரப்பட்ட மண், சுரங்கனாறு நீர்வரத்து பாலத்தில் சுமார் 5 அடி உயரத்திற்கு தேங்கி நிற்கிறது.  இதனால், மழைநீரானது ஒட்டான்குளத்திற்கு சென்றடைவது தடைபட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக புதர்களை வெட்டியும், மேவிய மண்ணை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலக்கூடலூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Suranganaru ,Cuddalore ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை