×

நாகை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 3 பேர் உயிரிழப்பு

நாகை, ஏப்.16: நாகை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 717 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (14 ம் தேதி) வரை 10 ஆயித்து 493 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று (15ம் தேதி) 134 பேர் பாதிக்கப்பட்டனர், அதேபோல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் நேற்று முன்தினம் வரை 90 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை, மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 9410 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1153 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 154 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்தனர். 1105 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 134பேர் குணமடைந்துள்ளனர்

Tags : Corona ,Naga district ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...