×

அரியலூர் நகரில் 3 பேருக்கு கொரோனா: தெருவுக்கு சீல்

அரியலூர், ஏப்.16: அரியலூர் நகரில் ஒரே தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து நகராட்சி ஊழியர்கள் தெருவை அடைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 14ம் தேதி வரை மட்டும் 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் நகர பகுதியில் உள்ள சாக்கோட்டை தெருவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தையடுத்து அந்த பகுதியினை நகராட்சி ஊழியர்கள் தகரத்தினால் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைப்பெற்றது. கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் அரியலூரில் தெரு பகுதிகள் முதன்முறையாக தகரத்தினால் அடைக்கபடுவது குறிப்பிடதக்கது.

Tags : Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...