×

அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூர், ஏப்.16: அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டு குளிந்த காற்று வீசியது, மாலை பரவலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.  அரியலூர், செந்துறை, கீழப்பழுவூர், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.இந்த மழையால் வெப்பம் தணிந்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து, தாழ்வான பகுதிகளை நோக்கி ஓடியது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெப்பத்தில் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...