×

விக்கிரமங்கலம் அருகே 4 மாத கர்ப்பிணி மர்மசாவு

தா.பழூர், ஏப்.16: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமம் மேல தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் ( 33). இவரது மனைவி இந்துமதி (24). இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டரை வயதில் மித்திரன் என்ற மகன் உள்ளான். இந்துமதி மீண்டும் கர்ப்பமுற்று 4 மாதங்களான நிலையில் சில தினங்களுக்கு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் கீழநத்தத்தில் உள்ள வீட்டில் இந்துமதி யாரும் இல்லாதபோது பிணமாக தூக்கில் தொங்கியதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் இந்துமதியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி தேவராஜ், விக்கிரமங்கலம் எஸ்ஐ மதன்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத் மேல் விசாரணை செய்து வருகிறார்.

Tags : Wickramangala ,
× RELATED விக்கிரமங்கலம் அருகே கூலி தொழிலாளி தற்கொலை