×

கேசராபட்டியில் கொரோனா தொற்று விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி, ஏப்.16: பொன்னமராவதி அருகே கேசராபட்டி கிராமத்தில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி கேசராபட்டி கிராமத்தில் பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகதார நிலைய சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைப் பணியாளர்கள் மற்றும் அக்கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணிதல், பொது மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்தல் மற்றும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவதல் போன்றவை விளக்கி கூறினார்.

Tags : Corona Infection Awareness ,Kesarapatti ,
× RELATED பொன்னமராவதியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்