×

இலுப்பூரில் 2வது நாளாக கோடை மழை

இலுப்பூர், ஏப் 16: இலுப்பூர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்று மாலை திடீர் என கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இலுப்பூர் பகுதியில் கடந்த வாரம் பெய்த பருவமழைக்கு பிறகு மழையே பெய்யவில்லை. பொதுமக்கள் கோடைவெயிலினால் மிகவும் அவதியுற்று வந்தனர். சிறிய குளங்கள் நீரின்றி வறண்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கோடை மழை பெய்த நிலையில், இலுப்பூர் பகுதியில் மழை பெய்யவே இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென கருமேக கூட்டடங்கள் கூடின. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. நேற்றும் மாலை அரை மணி நேரம் மழைபெய்தது. இதனால் பூழி குளிர்ந்தது. வெப்பம் தணிந்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Iluppur ,
× RELATED மாதாந்திர பராமரிப்பு பணி எதிரொலி...