×

திருவாரூர் மாவட்டத்தில் அதிசய நிகழ்வு நாளை ‘நிழல் இல்லா நாள்’

திருவாரூர், ஏப்.16: சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் ‘நிழல் இல்லா நாள்’ (பூஜ்ஜிய நிழல்) என்று அழைக்கப்படுகிறது. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால், சூரியன் எப்போதும் சரியாக தலைக்கு மேல் வருவதில்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே வரும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இருமுறை பூஜ்ஜியமாகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அரிய, அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ் வதில்லை. அந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் ஏற்படும். சூரியனின் வடக்கு நகர்வு நாட்களில், ஒரு நாளும், தெற்கு நகர்வு நாட்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும்.

பொதுவாக மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை கண்டுகளிக்கலாம். பகல் 12 மணிக்குத்தான் பொருட்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நாளை (17ம் தேதி) சனிக்கிழமை அன்று பகல் 12:10ம ணி முதல் 12:13 வரை காண முடியும். குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், குடவாசல் பகுதிகளில் பகல் 12:11 மணிக்கும், மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளில் பகல் 12.12 மணிக்கும் நிழல் இல்லாமல் இருக்கும் இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட செயலாளர் பொன்முடி கூறுகையில், அறிவியலாளர்களால் நிழல் இல்லா நாள் என கூறப்படும் அதிசய நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும்.

இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்திய ரேகையின் மீது சரியாக விழுவதுதான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளைவிட்டு விலகிச் செல்லாமல் நேராக விழுகிறது. வழக்கமாக சூரியன் வடகிழக்கு அல்லது தென்கிழக்கில் உதிக்கும். ஆனால் இந்நாளில் சூரியன் சரியாக கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். இந்த ஆண்டு கோவிட்-19 பெரும் நோய் தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.எனவே, மாணவர்கள் தங்களது வீடுகளிலுள்ள சிறிய பைப் துண்டுகள், மரக் கால், புத்தகம் போன்ற பொருட்களை வாசலில் அல்லது மாடிகளில் வெயில் அடிக்கும்போது வைத்து நிழல் இல்லை என்பதை அவர்களே சோதனை மூலம் உறுதிப்படுத்திட முடியும் என்றார்.

Tags : Miracle ,Thiruvarur district ,Shadowless day ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...