×

டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


ராமநாதபுரம், ஏப்.16:  டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 120 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்களில் 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என டாஸ்மாக் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தியது. இதன்படி மாவட்டத்தில் உள்ள 120 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், டாஸ்மாக் உதவி மேலாளர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆறு வாரங்களுக்கு பின் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் எபினேசர் செல்லராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், சித்தார்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மகேஸ்வரி, டாக்டர் நிலோபர் நிஷா, டாஸ்மாக் உதவி மேலாளர் சிக்கந்தர் பபிதா, உதவி மேலாளர் மகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Tasmac ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் 44% பீர் விற்பனை உயர்வு