×

சோழவந்தான் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணி தீவிரம்

சோழவந்தான், ஏப். 16:சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் செயல்அலுவலர் ஜீலான்பானு மற்றும் பணியாளர்கள் 18 வார்டுகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வங்கிகள், ஏடிஎம்கள், பஸ்நிலையம், வணிக வளாகங்கள், மத வழிபாட்டு தலங்கள், தெருக்கள், உணவகங்கள், பஸ், ஆட்டோக்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. அரசு உத்தரவுப்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடவும், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறவும், தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும், வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூகஇடைவெளியை கடைபிடிக்கவும் ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவிக்கப்படுகிறது.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...