×

கொரோனாவால் உயிரிழந்த முதியவர் யார் என தெரியாமல் திணறல் திருமங்கலத்தில் அட்மிட் ஆனவர்

திருமங்கலம், ஏப். 16: திருமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்.10ம் தேதி, 65 வயது முதியவர் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவரவே கடந்த ஏப்.11ம் தேதி இவர் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா வார்டிற்கு சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் சோ்ந்த போது இவருடன் உறவினர்கள் யாரும் வரவில்லை. தொடர் சிகிச்சையில் இருந்த முதியவர் நேற்று முன்தினம் அங்கு உயிரிழந்தார். இவரது உடல் தற்போது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் யார் என தெரியாமல் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர்,  போலீசார் திணறி வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்ட போது இறந்த முதியவர் அவராகவே வந்து உள்நோயாளியாக சேர்ந்துள்ளார் என தெரிவித்தனர். அவர் திருமங்கலத்தில் அட்மிட் ஆகும் போது பெயர், இருப்பிடத்தை ராம்நகர் என முகவரியாக கொடுத்துள்ளார். ஆனால் ராம்நகர் என்ற பெயரில் திருமங்கலம் நகரில் எந்ததெருவும் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் கொரோனால் உயிரிழந்த முதியவர் யார் என தெரியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...