×

அவனியாபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பால் பண்ணை உரிமையாளர் சாவு தந்தை, மகன்கள் கைது

அவனியாபுரம், ஏப். 16: அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (48). இவர் அப்பகுதியில் பால் பண்ணை மற்றும் உணவகங்கள் நடத்தி வந்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முத்து என்பவருடன் இணைந்து ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அப்போது இருவருக்கும் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப். 9ம் தேதி அவனியாபுரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு மகேஸ்வரன் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 3 பேர் திடீரென கத்தி, அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்து மகேஸ்வரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மகேஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் பெருங்குடியை சேர்ந்த முத்து (55), அவரது மகன்கள் ஸ்ரீஹரன் (30), ஸ்ரீராம் (25) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த 3 பேரையும், நேற்று மதியம் கைது செய்தனர்.

Tags : Avanyapuram ,
× RELATED திமிறும் காளைகள்… திமில் பிடித்து...