சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த ‘கிராண்ட் மாஸ்டர்’ விஸ்வநாதன் ஆனந்த்தின் தந்தை கே.விஸ்வநாதன் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது பிரிவால் வாடும் விஸ்வநாதன் ஆனந்த், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.