×

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

கோவில்பட்டி, ஏப்.16: கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் நாராயணாபுரத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் சுடலைமணி(32). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன் சுடலைமணி, ஆவல்நத்தம் ஊராட்சி சுந்தரலிங்கபுரத்தில் உள்ள தனியார் கிணற்றில் குளிக்க சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பவில்லை. அவரது உடல் நேற்று மிதந்தது. இதை பார்த்த கிராம மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சுடலைமணி உடலை மீட்டு பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!