×

நாசரேத் அருகே 28 பேருக்கு கொரோனா

நாசரேத், ஏப்.16: தமிழகத்தில் உருமாறிய கொரோனாவாக 2அலை தொடங்கியுள்ளது. இதையடுத்து அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசரேத் அருகே குளத்துக்குடியிருப்பில் இரு தம்பதியர் என 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சுகாதாரத்துறையினர் மூலம் 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.தென்திருப்பேரை வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன் தலைமையில் மருத்துவ குழுவினர் குளத்துக்குடியிருப்பு பகுதியில் 40பேர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுத்து சென்றனர். இதில் 24 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் பலர் வீடுகளிலும், இணை நோய் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாசரேத் வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி, தலைமையில் சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் தேசிகன் ஆகியோர் ரோந்து சென்று மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Corona ,Nazareth ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...