×

முத்தையாபுரம் அருகே மாடு மீது பைக் மோதி இருவர் காயம்

ஸ்பிக்நகர், ஏப்.16: முத்தையாபுரம் தோப்பு தெருவைச் சேர்ந்த கெட்டிபொம்மு மகன் அரசமுத்து (40). இவரும் நண்பரான அதே பகுதியை சேர்ந்த முத்துபிள்ளை மகன் சங்கர் (32) என்பவரும் தெர்மல் நகர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற மாட்டின் மீது பைக் மோதியது.இதில் கீழே விழுந்து காயம் அடைந்த அரசுமுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். படுகாயம் அடைந்த சங்கர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து முத்தையாபுரம் எஸ்ஐ சதீஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Muthiahpuram ,
× RELATED முத்தையாபுரத்தில் 29ம்தேதி மின்தடை