×

பாபநாசம் அருகே காதலியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

பாபநாசம், ஏப்.15: பாபநாசம் அருகே நெருங்கி பழகி காதலியை கைவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கோயில்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சுகன்யா (24). பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து விட்டு சென்னை மறைமலை நகரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார். கபிஸ்தலம் அருகே எருமைப் பட்டியைச் சேர்ந்த முருகராஜன் மகன் விஜய் (25). பி.இ மெக்கானிக் படித்து முடித்துவிட்டு திருச்சி ஒரு கம்பெனியில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் சுகன்யாவை திருமணம் செய்து கொள்ள விஜய் மறுத்து விட்டார். இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று சுகன்யா அளித்த புகாரின்பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புஷ்பவள்ளி வழக்குப்பதிந்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...